Saturday, January 31, 2026

பல மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்., சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் அதிர்ச்சி

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி சென்னையில் இருந்தும் கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுக்க உள்ளனர்.

அரசு பேருந்துகளில் முன்பதிவு முடிந்து விட்டன. ரயில்களிலும் அனைத்து இருக்கைகளும் நிரம்பி காத்திருப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தனியார் ஆம்னி பேருந்துகளை அதிகம் நம்பியுள்ளனர்.

இந்நிலையில் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளது பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கோவைக்கு ரூ.5,000 வரையிலும், சென்னை டூ நெல்லை, நாகர்கோவிலுக்கு ரூ.6,000 வரையிலும் கட்டணம் நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

Related News

Latest News