Friday, June 6, 2025

சிறுவனுக்கு பாலியல் தொல்லை : முதியவருக்கு 107 ஆண்டு சிறை தண்டனை

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஈழவதிருத்தி கோட்டூர் பகுதியை சேர்ந்த தாமோதரன் என்ற 60 வயது முதியவர், அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தமோதரனை போக்சோ வழக்கின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு பொன்னானி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று தாமோதரனுக்கு 107 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news