Thursday, August 14, 2025
HTML tutorial

மார்க்கெட்டில் கஞ்சா சாக்லேட் விற்பனை : ஒடிசா இளைஞர் கைது

திருப்பூர் மாவட்டம், பல்லடம் தினசரி மார்க்கெட்டில், ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மானஸ் முஸ்ரா என்பவர் பீடா கடை நடத்தி வருகிறார். இவர், கஞ்சா சாக்லேட் விற்பதாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது,

இதையடுத்து தனிப்படை போலீசார் கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கடையில் கஞ்சா சாக்லேட் இருந்தது தெரிய வந்தது. அதனையடுத்து பல்லடம் போலீசார், மானஸ் முஸ்ராவை கைது செய்து, அவரிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News