Thursday, July 31, 2025

குறைதீர் கூட்டத்தில் கூடுதல் ஆணையர் தாக்கப்பட்டதால் பரபரப்பு

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று (ஜூன் 30) நடந்த பொதுக் குறைதீர் கூட்டத்தின் போது, மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் ரத்னாகர் சாஹூ மீது சில இளைஞர்கள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் சாஹூவின் சட்டையின் காலரை பிடித்து அலுவலகத்திலிருந்து வெளியே இழுத்துச் சென்றனர்.

இந்த தாக்குதல் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோவாக பதிவாகி விரைவில் பரவி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் ஒடிசா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கு மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News