ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இதில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 51,650 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 10,897 வாக்குகள் பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு தற்போது வாக்கு எண்ணிக்கை வேகமாக உயர்ந்துள்ளது.