Sunday, October 5, 2025

இவர்களுக்கு இனி கடன் கொடுக்கக்கூடாது : ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி

ஒரு வங்கியின் இயக்குனர்கள், பங்குதாரர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் உறவினர்களுக்கு அதே வங்கியில் அதிகளவில் வாராக்கடன்கள் வழங்கப்படுவதால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுவது குறித்து ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இயக்குனர்கள், பங்குதாரர்கள், முக்கிய மேலாண்மை அதிகாரிகள் மற்றும் 5% பங்குதாரர்களின் உறவினர்களுக்கும், அவர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கும் வங்கிகளில் கடன் வழங்க உச்சவரம்புகளும் நிபந்தனைகளும் விதிக்கப்படும்.

அவர்களுக்கு கடன் வழங்கினால் அது பற்றிய முடிவெடுக்க வேண்டிய கூட்டங்களில் அவர்கள் கலந்து கொள்ள கூடாது. ஜாமீன், கடன் தள்ளுபடி போன்ற நடவடிக்கைகளிலும் பங்கேற்கக்கூடாது.

வங்கியின் சொத்து அளவுக்கு ஏற்ப கடன் அளவு வரம்புகள் அமைக்கப்பட்டுள்ளது: பெரிய வங்கிகள் ரூ.50 கோடி, நடுத்தர வங்கிகள் ரூ.10 கோடி, சிறிய வங்கிகள் ரூ.5 கோடி வரை, உள்ளூர் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ரூ.1 கோடி, மற்ற நிதி நிறுவனங்களுக்கு ரூ.50 கோடி வரை வழங்கலாம்.

6 மாதத்திற்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கடன் விவரங்களை அறிக்கையிட வேண்டும். வங்கி நிதி அறிக்கைகளில் உறவினர்களுக்கு வழங்கப்பட்ட கடன், வாராக்கடன் நிலை போன்ற தகவல்களை வெளிப்படையாக குறிப்பிட வேண்டியது கட்டாயம். விதிகள் மீறுமின் அபராதங்களும், தடைகளும் விதிக்கப்படும்.

இது அடுத்தாண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News