Sunday, June 22, 2025

அடுத்த 24 மணி நேரம்! வெடிக்கப் போகும் போர்? பதிலடி கொடுக்குமா ஈரான்?

இப்போது உலகம் முழுவதும் ஒரே ஒரு விஷயம் தான் பேசப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் எடுக்கப்படும் ஒரு முடிவுதான், இந்த உலக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது.

அமெரிக்கா, இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்று, நேரடியாக ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல் நடத்தியிருக்கிறது. இது சிறிய சம்பவம் இல்லை. ஈரானின் மூன்று முக்கியமான அணு மையங்கள் – ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்ஃபஹான் –மீது நேரடியாக குண்டு வீசப்பட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதைத் திறமையாக உறுதி செய்திருக்கிறார். “எங்கள் விமானங்கள் எல்லாம் வெற்றிகரமாக தாக்கி திரும்பிவிட்டன… இது உலகத்தில் எதுவும் செய்ய முடியாத ஒரு சாதனை,” என்று பெருமையுடன் கூறுகிறார்.

ஆனால், உண்மையான கேள்வி இது தான் – இதன் பின்னணி என்ன?

ஈரானும் இஸ்ரேலும் ஏற்கனவே 8 நாட்களாக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருக்கின்றனர். இப்போது அமெரிக்கா நேரடியாக ஈரானில் குண்டு வீசியிருப்பது, இந்த போருக்கு இன்னொரு முகத்தைக் கொடுத்துவிட்டது.

இதனால் உருவாகும் அடுத்த கட்டம் தான் கவலையளிக்கிறது.

ஈரான் அமைதியாக இருக்குமா? இல்லை. பதிலடி தருமா? என்றால், நிச்சயமாக பதிலடி தரும். அந்த பதிலடி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படியென்றால்… நேட்டோ நாட்டுகள் தலையிடும். அமெரிக்கா உள்ளதால், ரஷ்யா களமிறங்கும். அதன் பின் பல இஸ்லாமிய நாடுகள், ஈரானுக்கு துணை நின்று தாக்குதலில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

சீனாவும் இந்தச் சூழலில் மவுனமாக இருக்காது.

இதெல்லாம் சேர்ந்தால் இது ஒரு பெரிய மோதலாக ஆகி, நேரடியாக 3வது உலகப்போராக மாற்றும் அபாயம் இருக்கிறது.

இஸ்ரேல் தொடர்ந்து அமெரிக்க ஆதரவை எதிர்பார்க்கிறது. ஆனால் அமெரிக்கா ஒரு கட்டத்தில் ஆதரவை விலக்கி விட்டால், இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படும். இதுவே ஈரானுக்கு வெற்றிக்கே வழிவகுக்கும்.

முக்கியமாக, அடுத்த 24 மணி நேரத்தில் ஈரான் எடுக்கும் முடிவு தான் – இந்தப் போர் எந்த திசையில் நகரும் என்பதை தீர்மானிக்கப்போகிறது.

உலகம் இப்போது ஒரு சிறிய தீக்குச்சியை மட்டும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது… அது எப்போது எரியும் என்பது யாருக்கும் தெரியாது… ஆனால் எரிந்ததும் உலகமே உலுக்கப்படும்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news