Wednesday, August 13, 2025
HTML tutorial

இனி AC யை இப்படித்தான் பயன்படுத்த முடியும்..,புது ரூல்ஸ் வரப்போகுது

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால் கட்டார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏசியில் குறிப்பிட்ட வெப்பநிலையை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது தொடர்பான பரிசோதனையை இந்தியா விரைவில் மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி ஏசியில் இனிமேல் வெப்பநிலையை 20 டிகிரி செல்சியசில் இருந்து 28 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடு வர உள்ளது என்று கூறியுள்ளார். அதிக மின்சார பயன்பாட்டை தவிர்க்கவும், ஸ்மார்ட் எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கவும் இந்த திட்டத்தை அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஏசி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெப்ப அலை பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும், அதனால் அரசுக்கு புதிய வகை சவாலை ஏற்படுத்தி உள்ளதாகவும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News