Friday, March 21, 2025

பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம்

சென்னை மெட்ரோ ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக மெட்ரோ நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மெட்ரோ ரெயிலில் 20 மற்றும் அதற்கு மேற்பட்ட மெட்ரோ டிக்கெட்டுகளை காகித முறையில் வாங்கினால் 10% தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. இந்த சலுகை மார்ச் 1 ஆம் தேதி (1.3.2025) முதல் திரும்பப் பெறப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் CMRL மொபைல் ஆப் மூலம் QR முறையில் குரூப் டிக்கெட் எடுத்தால் 20% தள்ளுபடி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news