Thursday, July 24, 2025

மகளிர் உரிமைத்தொகை புதிய விண்ணப்பம்! இதுதான் கடைசி வாய்ப்பு… தேதியை குறிச்சுக்கோங்க!

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழ்நாட்டில் பல குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறது.

தற்போது, சுமார் 1 கோடியே 15 லட்சம் பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் நிதியுதவியை பெற்று வருகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மொத்தமாக 2 கோடியே 30 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது. இதன் பொருள் என்ன?

இன்னும் லட்சக்கணக்கான பெண்கள், இந்த நலத்திட்டத்தில் இணைக்கப்படாமல் காத்திருக்கிறார்கள்.

புதிய ரேஷன் அட்டையுடன் இருப்பவர்கள், முன்பு விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டவர்கள், அல்லது விண்ணப்பிக்கவே தவறியவர்கள் – இப்போது அனைவருக்கும் ஒரு புதிய வாய்ப்பு கிடைக்கவிருக்கிறது.

இது தொடர்பான எதிர்பார்ப்பு கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட பஜெட்டில் தெளிவாக பேசப்பட்டது.
அதன்படி, திட்டத்தை மூன்று மாதங்களில் விரிவுபடுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அறிவித்தனர்.

அந்த வரிசையில், ஜூன் மாதம், அதாவது ஜூன் 3 ஆம் தேதி – முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, புதிய பயனாளர்களுக்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என தகவல்கள் உறுதிபடுத்துகின்றன.

அதைத்தொடர்ந்து, புதிய விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
விண்ணப்பிப்பதற்குத் தேவையான ஆவணங்கள் என்னவென்றால்:

  • குடும்ப ரேஷன் அட்டை
  • ஆதார் அட்டை
  • குடும்பத்தலைவி பெயரில் வங்கி கணக்கு
  • வருமான சான்றிதழ் (தேவைப்படலாம்)

விண்ணப்பிப்பதில் தகுதி உள்ள அனைத்து பெண்களும், இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்பெற வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.

முக்கியமாக, விண்ணப்பித்தவர்கள், ஜூலை மாதத்திலிருந்து தங்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக ரூ.1000 மதிப்புள்ள உதவித்தொகையை பெறத் தொடங்குவார்கள் என்ற நிலையான தகவல் வெளியாகியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news