அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததை திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் செல்வாக்கை இழந்த கட்சியாக திமுக இருப்பதால், அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் எங்கள் கூட்டணி பற்றியே திமுகவினர் பேசி வருவதாக தெரிவித்தார்.
தமிழகத்தில், சட்டம்-ஒழுங்கு இல்லாத ஆட்சி நடைபெற்று வருவதால், பாலியல் குற்றங்கள் மற்றும் கொடூர கொலைகள் அதிகமாக நடைபெற்று வருகிறது என்றும் குற்றம்சாட்டினார்.