அகமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்திற்கு பிறகு, விமான பைலட்டுகள் குறித்த தகவல்கள் வெகுவாக கவனம் பெற்று வருகின்றன. குறிப்பாக விமான பைலட் ஆவதற்கான தகுதி மற்றும் அவர்களின் சம்பளம் குறித்து தெரிந்துகொள்ள, பெரும்பாலோனோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்தநிலையில் விமானிகளின் சம்பளம் குறித்த விவரங்கள் தற்போது தெரிய வந்துள்ளன. அந்தவகையில் ஏர் இந்தியா போயிங் 787 ரக விமானத்தை இயக்கும் விமானிக்கு, மாத சம்பளமாக ரூபாய் 8 முதல் 10 லட்சம் ரூபாய் வழங்கப் படுகிறது.
அனுபவம் வாய்ந்த விமானிகளுக்கு மாதம் 10 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக அளிக்கப்படுகிறது. பொதுவாக விமானியின் அனுபவம், அவரின் பயண தூரம் மற்றும் விமான நிறுவனம் ஆகியவற்றை பொறுத்தே விமானிகளின் சம்பளம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
சம்பளம் தவிர்த்து மருத்துவ காப்பீடு உள்ளிட்ட, பல்வேறு சலுகைகளும் விமானிக்கு வழங்கப்படுகின்றன. இது மட்டுமின்றி இரவு நேரங்களில் விமானத்தை இயக்குதல், கூடுதல் நேரம் பணிபுரிவது, விடுமுறை நாட்களில் வேலை செய்வது ஆகியவற்றுக்கும் தனியாக சம்பளம் அளிக்கப்படுகிறது.
விமான பைலட் ஆவதற்கு கல்வி தவிர்த்து ஏராளமான கடின பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி தொடர்பு கொள்ளும் திறமை, சூழ்நிலை குறித்த விழிப்புணர்வு, முடிவு எடுக்கும் திறன், தலைமைத்துவம், பிரச்சனையை தீர்க்கும் ஆற்றல் உள்ளிட்ட திறமைகளும் சிறந்த பைலட் ஆகுவதற்கு அவசியமாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.