Friday, June 6, 2025

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுகின்றன – அமைச்சர் கீதா ஜீவன்

தமிழகத்தில் சமீப காலமாக பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது : பாலியல் குற்றங்கள் குறித்து பெண்கள் புகார் கொடுக்க முன் வர வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்கும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுகின்றன. முதலமைச்சசர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்கியுள்ளார் என அவர் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news