சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான உத்தரவு அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது. சென்னை மாநகராட்சி இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
சென்னையில் சுமார் 1.8 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. இவற்றின் உடலில் சிப் பொருத்தும் பணியை மாநகராட்சி செய்து வருகிறது. வளர்ப்பு நாய்களை சிலர் சரியாக பராமரிக்க முடியாமல் சாலையில் விட்டு விடுகிறார்கள். இப்படி செய்வதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தாவிட்டால் ரூ.3,000 அபராதம் விதிக்கப்படும்” என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இதற்கான உத்தரவை அடுத்த மாதம் அமல்படுத்த உள்ளது.