நாட்டின் 79-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மெட்ரோ ரயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும். மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கும் கிடைக்கும்.
கூட்டம் குறைவான நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். கூட்டம் அதிகம் இல்லாத நேரத்தில் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.