கனவுகளை சுமந்து கொண்டு லண்டனுக்கு புறப்பட்ட மருத்துவ தம்பதி, 3 குழந்தைகளுடன் உயிரிழந்த சம்பவம், மனதை ரணமாக்கியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரதீப் ஜோஷி என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக லண்டனில் மருத்துவராக பணியாற்றி வந்தார், இவரது மனைவி கோனி வியாஸ் உதய்பூரில் மருத்துவராக வேலை செய்த நிலையில், லண்டனுக்கு குடிபெயரும் ஆசையோடு கடந்த 2 நாட்களுக்கு முன் வேலையை ராஜினாமா செய்தார்.
பல கனவுகளோடு, 3 குழந்தைகளுடன் விமானத்தில் பயணித்த மருத்துவ தம்பதி, கோர விபத்தில் உயிரிழந்தனர். புது வாழ்க்கையை ஆரம்பிக்கும் மகிழ்ச்சியில், அவர்கள் விமானத்தில் குடும்பமாக எடுத்து கொண்ட செல்ஃபி, அவர்களின் கடைசி நினைவாக மாறியது. இத்துயரமான சம்பவம் மனதை நொறுங்க செய்துள்ளது.