தமிழகம் முழுவதும் இனி ஒரே விலையில் இறைச்சி விற்கப்படும் என்றும் அதற்கான விலையை அரசே நிர்ணயிக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முட்டை மற்றும் பிராய்லர் கோழி விலை மட்டுமின்றி, உயிருடன் விற்கப்படும் ஆடுகள், கோழிகளின் விலை மற்றும் அவற்றில் இருந்து கிடைக்கும் இறைச்சியின் விலையும் நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.