Saturday, June 14, 2025

3வது ஆலையை அமைக்க மாருதி சுசுகி நிறுவனம் முடிவு

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் மாருதி சுசுகிக்கு, அரியானா மாநிலத்தில் 2 ஆலைகள் உள்ளன. இந்த நிலையில், 7 ஆயிரத்து 410 கோடி ரூபாய் செலவில், 3வது ஆலையை அமைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் ஆலை அமைக்கப்படும் என்றும், ஏற்றுமதி உள்ளிட்ட சந்தை தேவையின் வளர்ச்சி காரணமாக 3வது ஆலை அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news