Sunday, February 23, 2025

25 வயது இளைஞன் எனக்கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய நபர் கைது

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த மாதம் அவரது மொபைல்போனில் ‘ஸ்னாப் சேட்’ (snapchat) என்ற சமூக வலைதளம் வாயிலாக தொடர்பு கொண்ட நபர் தான் சென்னையை சேர்ந்த 25 வயது வாலிபர் என கூறி பேசி உள்ளார்.சமூக வலைதள கணக்கில் இருந்த புகைப்படத்தை கண்ட பெண்ணும் அவருடன் தொடர்ந்து பேச துவக்கி தனது புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

அந்த நபர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்தரங்க புகைப்படங்களையும் கேட்டு வாங்கி உள்ளார். நாளடைவில் அந்த நபரின் பேச்சில் சந்தேகமடைந்த இளம் பெண் வீடியோ காலில் வரும் படி அழைத்துள்ளார் அவர் மறுத்த நிலையில் இளம்பெண் பெற்றோரிடம் நடந்ததை கூறி உள்ளார். பின்பு அந்த நபர் அந்தரங்க புகைப்படங்களை வைத்து சமூக வலைதளத்தில் வெளியே விடுவேன் என மிரட்டி உள்ளார்

பின்பு இது குறித்து மாணவியின் பெற்றோர் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவி கொடுத்த சமூக வலைதள கணக்கை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் சென்னை,கொளத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார்(38)என்பதும், இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாகவும், அதேவேளையில் பகுதி நேர ‘பைக் டாக்ஸி’ ஓட்டி வந்ததும் தெரிய வந்தது.

இவரை கைது செய்த போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் கைது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர். மேலும் பெண்ணுக்கு ஆறுதல் மற்றும் அறிவுரை கூறிய அனுப்பி வைத்தனர்.

Latest news