மகளிர் உரிமை திட்டத்தில் விடப்பட்ட மகளிர் எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூரில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இன்று காலை தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய முதலமைச்சர் ஜூலை 15 முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் எனவும் அந்த முகாமில் மகளிர் உரிமை திட்டத்தில் விடப்பட்ட மகளிர் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார்.