Friday, August 15, 2025
HTML tutorial

அரசுப் பேருந்து ஓட்டுநரை காலணியால் தாக்கிய பணிமனை மேலாளர் பணி இடைநீக்கம்

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் கோவை செல்வதற்கான பேருந்தில் பயணிகள் அமர்ந்திருந்தனர். பேருந்தை எடுக்காததால் ஓட்டுநரிடம் பேருந்தை எடுக்குமாறு பயணிகள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதிலளித்த ஓட்டுநர் பணிமனை மேலாளர் உத்தரவின்றி பேருந்தை எடுக்கமுடியாது என கூறியுள்ளார். இதையடுத்து பயணிகள் மேலாளரிடம் முறையிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட்டார். மேலும் ஓட்டுநர் கணேசனை காலணியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் வெளியானது.

இந்நிலையில், மேலாளர் மாரிமுத்துவை பணி இடைநீக்கம் செய்து மதுரை மண்டல மேலாண் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News