மத்திய பிரதேசம் மாநிலம், மந்தசௌர் பகுதியில் உள்ள காந்திசாகர் வனப்பகுதியில் வெப்ப காற்று பலூன் ஒன்றில் பறக்க மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் விரும்பினார். அதற்காக அவர் பலூனில் ஏறினார்.
அடுத்த சில நிமிடங்களில் பலூன் தயாராக இருந்த போது எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. இதில் அவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
