Friday, August 15, 2025
HTML tutorial

கருத்து மோதல் இருந்தாலும் நாட்டிற்காக ஒன்றாக நிற்போம் – திமுக எம்.பி. கனிமொழி

ஆப்ரேஷ்ன் சிந்தூர் குறித்து எடுத்துரைக்க திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழு ஸ்பெயின், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றது.

இந்நிலையில், நாடு திரும்பிய கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பல நாடுகளில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருந்தது என்றும் தீவிரவாத தாக்குதலால் இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.

பல்வேறு நாடுகளுக்கு பயணித்து இந்தியாவின் குரலாக ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக எடுத்துரைத்ததாகவும் கனிமொழி தெரிவித்தார்.

ஆளுங்கட்சியுடன் கருத்து மோதல், சூடான விவாதங்கள் இருந்தாலும் நாட்டிற்காக ஒன்றாக நிற்போம் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News