மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதன்முறையாக சுப்மன் கில்லின் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி போட்டியை டிரா செய்ய வாய்ப்பிருந்தும் கூட, அதற்காக போராடாமல் வெற்றியை எளிதாக இங்கிலாந்தின் கைகளில் தூக்கிக் கொடுத்துள்ளது.
இதையடுத்து விராட் கோலி தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறார். கோலி கேப்டனாகவோ, வீரராகவோ இருந்திருந்தால் கண்டிப்பாக இந்தியா இவ்வளவு மோசமாக தோற்றிருக்காது என்பது தான் கிரிக்கெட் விமர்சகர்கள், ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.
போட்டிக்கு நடுவில் முன்னாள் இங்கிலாந்து வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான ஸ்டூவர்ட் பிராட், ” 350 ரன்களை இலக்காக வைத்தும், இந்தியா இந்த போட்டியை தோற்க போகிறது. விராட் கோலி களத்தில் இருந்திருந்தால் இந்தியா இவ்வளவு உதவியற்ற சூழ்நிலையில் இருந்திருக்காது. டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பு என்பது எளிதானதல்ல,” என்று விமர்சனம் செய்தார்.
இதேபோல பும்ராவின் பழைய பேட்டி ஒன்றும் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தில் தோற்க வேண்டிய ஒரு டெஸ்ட் போட்டியை, கேப்டனாக கோலி வென்று கொடுத்திருப்பார். அப்போது கோலி குறித்து பும்ரா, ” விராட் கோலிக்கு நாங்கள் தேவைப்படவில்லை. அவர்தான் எங்களுக்கு தேவைப்படுகிறார்,” என்று கோலியை வெகுவாக புகழ்ந்திருப்பார்.
அவர் பேசிய வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ” King கோலி மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும்,” என, BCCIக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.