கர்நாடக சட்டப்பேரவையில் இன்று காலை உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்வு நடைபெற்றது. கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மற்றும் மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஸ்வர் காண்ட்ரே ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்தனர்.
நடைப்பயணத்தை முடித்துவிட்டு, சட்டப்பேரவை வளாகத்துக்கு டி.கே. சிவக்குமார் சைக்கிளில் திரும்பினார். அப்போது சைக்கிளை நிறுத்தும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். அருகிலிருந்த பாதுகாப்புப் படையினர் டி.கே.சிவக்குமாரை பிடித்ததால், அவர் காயமடையவில்லை.