Monday, July 7, 2025

உத்தரபிரதேசத்தில் நடுரோட்டில் பத்திரிகையாளரை சுட்டுக்கொன்ற மர்மநபர்கள்

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராகவேந்திர பாஜ்பாய் (35) என்ற பத்திரிகையாளர் ஒரு முன்னணி இந்தி நாளிதழில் நிருபராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த பத்திரிகையாளர் தனது இரு சக்கர வாகனத்தில் சீதாபூர் – டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் 3 முறை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். காவல்துறையினர் பத்திரிகையாளரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

அரசு நெல் கொள்முதல் மற்றும் நில பேரங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து ராகவேந்திர பாஜ்பாய் செய்தி வெளியிட்ட நிலையில் 4 அரசு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் கடந்த பத்து நாட்களாக ராகவேந்திராவுக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news