ஆந்திரம் மாநிலம், சட்டெனப்பள்ளி தொகுதிக்கு கடந்த ஜூன் 18ஆம் தேதி வருகை தந்திருந்த முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியைக் காண பெருங்கூட்டம் திரண்டிருந்தது. அப்போது சாலையில் திரண்டிருந்த கூட்டத்தில் ஒருத்தராக முன் வரிசையில் நின்று கொண்டிருந்த சீலி சிங்கையா எதிர்பாராதவிதமாக ஜெகன்மோகன் சென்று கொண்டிருந்த காரின் முன், நிலை தடுமாறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது காரின் முன்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. அதில் அவர் உடல் நசுங்கி பலியானார். பலியான நபர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.