தமிழகத்தில் இரவு நேரங்களில் குளிர் அதிகமாக இருக்கும்

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு இரவில் குளிர்வாட்டும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

தென் இந்திய பகுதிகளில், வறண்ட வாடைக்காற்று வலுவாக வீசுகிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு இரவில் குளிர்வாட்டும் என்றும் மலைப்பிரதேசங்களில் இருப்பது போல உணர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பகல் நேரங்களில் சென்னை – குமரி வரையிலான கடலோர மாவட்டங்கள், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல் ஆகிய உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

நீலகிரி, உதகை, குன்னூர், கோவை, திண்டுக்கல், கொடைக்கானல் ஆகிய இடங்களில் இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 செல்சியஸ் முதல் 10 செல்சியச் வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

16,17, 18ம் தேதிகளில் தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்புள்ளது என்றும் அதன்பின்னர் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, புயலாக வலுபெற கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News