Wednesday, June 4, 2025

பாகிஸ்தான் ராணுவம் பொடியாக போகுது?! | விமானப்படை Vs தரைப்படை – யுத்தம் ஆரம்பம்!

இப்போது பாகிஸ்தான் ராணுவத்தில் ஒரு பெரிய உட்கட்டமைப்பு கலகம் வெடிக்க போவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.. குறிப்பாக, பாகிஸ்தான் விமானப்படைக்கும் தரைப்படைக்கும் இடையே கடுமையான அதிகாரப் போட்டி உருவாகி உள்ளது. இதுவரை பாகிஸ்தானை அதிகாரபூர்வமாகவோ, மறைமுகமாகவோ ஆட்சி செய்தது தரைப்படைதான். கடந்த 75 ஆண்டுகளிலும், பொதுவாகவே பாகிஸ்தானின் அரசியல், வெளியுறவுக் கொள்கைகள், குறிப்பாக இந்தியாவை நோக்கிய நிலைப்பாடுகள் எல்லாம் ராணுவத்தால் தான் தீர்மானிக்கப்பட்டன.

ஜெனரல் அயூப் கான் முதல் பர்வேஸ் முஷாரஃப் வரை நான்கு ராணுவத் தலைவர்கள் நேரடியாக அதிபராக இருந்தார்கள். பிற காலங்களில் கூட, ராணுவம் சொல்வதே அங்குள்ள அரசியல் சட்டம் போலவே இருந்தது.

2018ல் இம்ரான் கான் பிரதமராக வந்தபோதே அவர் ராணுவத்தின் ஆசிர்வாதத்துடன் வந்தார் என்றே கூறப்பட்டது. ஆனால் 2022ல் ராணுவத்துடனான மோதலால் அவரும் சாய்ந்தார்.

இப்போது முக்கியமாக பாகிஸ்தான் ராணுவத்துக்குள்ளே ஒரு புதிய சக்தி மாற்றம் நடக்கிறது. இதுவரை மேல் கட்டுப்பாடு வைத்திருந்த தரைப்படை பின்வாங்க, விமானப்படை முன்னேற தொடங்கியுள்ளது. இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் நூர் கான், முரித், ஷோர்கோட் ஆகிய மூன்று விமானப்படைத் தளங்கள் பாதிக்கப்பட்டன. ஆனால் இந்த மோதலில் விமானப்படையே முக்கிய பங்கு வகித்தது.

இதன் காரணமாக பாகிஸ்தானின் ராணுவ செலவுகள், கொள்முதல்—என எல்லா காவனமும் விமானப்படையை நோக்கி நகர்கின்றன. இதனால் விமானப்படைத் தளபதி ஜாகீர் அகமது பாபரின் பலம் நாளுக்கு நாள் உயரும் நிலையில், தரைப்படைத் தளபதி அசிம் முனீரின் அதிகாரம் சவாலுக்கு  உள்ளாகி வருகிறது.

இதுவே தற்போது பாகிஸ்தான் ராணுவத்தில் ஆழமான கருத்து வேறுபாடுகள், உள் மோதல்கள், அதிகாரப் போட்டிகள் உருவாக ஒரு முக்கிய காரணமாக உள்ளது. பாகிஸ்தானின் அரசியல், ராணுவ சக்தி, அனைத்தும் மாற்றம் அடையும் கட்டத்திற்கு வந்து விட்டது.

இது வெறும் அதிகாரக் போட்டிதானா, இல்லை சின்னதாய் தொடங்கி பெரிய கலகமாக மாறுமா என்பது பெரும் கேள்வி குறியாக இருக்கிறது….

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news