திருமணம்… என்பது இரு மனங்கள் இணையும் ஒரு விழா மட்டுமல்ல, இப்போது அது ஒரு பெரிய பொருளாதாரச் செலவாக மாறிவிட்டது!”
இப்போதுள்ள காலகட்டத்தில், ஒரு திருமணத்திற்கு செலவாகும் தொகை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. மண்டபம், நகை, உணவு, அலங்காரம் – எல்லாம் சேர்த்து கணிசமான பணம் தேவைப்படும்.
இதனால், திருமணத்துக்காக கடன் வாங்குவது என்பது இப்போது ஒரு வழக்கமான விஷயமாகி விட்டது.
அதிகமான வங்கிகள், குறிப்பாக ஐசிஐசிஐ வங்கி, ரூ.50 லட்சம் வரை பிணையமில்லாத திருமணக் கடன்கள் வழங்கி வருகிறது. இதற்கு உங்கள் சொத்துகளை அடமானம் வைக்கவே வேண்டிய தேவையில்லை.
திருமணக் கடன் என்பது, ஒரு வகையான தனிநபர் கடன் தான்.
இதன் மூலம், உங்கள் திருமண செலவுகள் அனைத்தையும் –
மணப்பெண் உடை முதல், கேட்டரிங் வரைக்கும் – நிதியளிக்க முடியும்.
குறிப்பாக இந்தக் கடன், ஆண்டுக்கு 10.85% வட்டி விகிதம் முதல் ஆரம்பமாகிறது.
12 மாதம் முதல் 72 மாதங்கள் வரை இந்தக் கடனை திருப்பிச் செலுத்தலாம்.
இந்தக் கடன் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்றால்,
21 முதல் 58 வயதுக்குள்ளானவர்கள், சம்பளதாரிகள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் இதற்குத் தகுதியுடையவர்கள்.
உங்கள் வருமானம், கடன் மதிப்பெண் (CIBIL Score), வரலாறு – அனைத்தும் இதற்கு மிகவும் முக்கியம்.
மேலும் EMI கால்குலேட்டர் மூலம், நீங்கள் எவ்வளவு மாதம் என்ன வட்டி செலுத்தவேண்டும் என்பதை முன்னரே தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு தேவையான ஆவணங்கள் என்னவென்று பார்த்தால்,
1. ஆதார் கார்டு
2. பான் கார்டு
3.முகவரிச் சான்று
4. வருமானச் சான்று
5.திருமண அழைப்பிதழ் (Invitation)
இவையெல்லாம் கொடுத்தவுடன் வங்கி சரிபார்ப்பு செய்த பிறகு, உங்கள் கடன் 72 மணி நேரத்திற்குள் உங்கள் வங்கிக் கணக்கில் வந்துவிடும்..