பணத்தை வங்கியில் வைப்பது உண்மையிலேயே நஷ்டமா? எச்சரிக்கும் நிபுணர்கள்! இவை தான் காரணம்!

பணத்தை வங்கியில் போட்டு வைப்பது ஏன் நஷ்டமாக பார்க்கப்படுகிறது என்பதை விளக்குகிறது இந்த பதிவு. பொதுவாக மக்கள் தங்கள் சேமிப்புகளை வங்கிகளில் வைத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் நிபுணர்கள் இன்றைய சூழலில் பணத்தை வெறுமனே வங்கியில் போட்டு வைப்பது நஷ்டமாகவே கருதப்படுவதாக கூறுகின்றனர்.

இதற்கான முக்கிய காரணம் பணவீக்கம் அதாவது Inflation. பணவீக்கம் என்பது பொருட்களின் விலை ஆண்டுதோறும் உயர்வதை குறிக்கிறது. உதாரணமாக, இன்று 100 ரூபாய்க்கு கிடைக்கும் பொருள், சில ஆண்டுகளில் 120 ரூபாய்க்கு உயர்ந்து விடும். ஆனால் வங்கியில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்தால், வருடத்திற்கு சராசரியாக 3 முதல் 4 சதவிகித வட்டி மட்டுமே கிடைக்கிறது. அதே சமயம், பணவீக்கம் 6 முதல் 7 சதவிகிதம் வரை இருக்கும். இதனால் வங்கியில் வைத்திருக்கும் பணத்தின் மதிப்பு குறைந்து விடுகிறது.

மேலும், நிரந்தர வைப்பு அதாவது Fixed Deposit திட்டங்களில் கூட, கிடைக்கும் வட்டி விகிதம் பல நேரங்களில் வரி கழித்த பின் பணவீக்கத்துடன் பொருந்தாது. இதனால் பணத்தை வங்கியில் வைத்திருப்பது, பாதுகாப்பானதாக இருந்தாலும், வருமானம் ஈட்டும் வழி அல்ல என்பதே நிலை.

மேலும், நிபுணர்கள் கூறும்போது வங்கியில் தேவையான அளவு மட்டுமே வைத்துக் கொண்டு, மீதமுள்ள பணத்தை பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம் அல்லது நிலம் போன்ற முதலீடுகளுக்கு மாற்றலாம். இவை நீண்ட காலத்தில் அதிக லாபத்தை தரும்.

எனவே, பணத்தை வெறும் வங்கியில் வைத்து பாதுகாப்பாக வைத்திருக்கிறோம் என்ற நம்பிக்கையால் நிம்மதி கிடைத்தாலும், அதுவே நிதி வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய நஷ்டத்துக்கான காரணம் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

எது எப்படி இருந்தாலும், முதலீடு செய்வதற்கு முன் உங்கள் தனிப்பட்ட நிதி ஆலோசகரை கலந்தாலோசிப்பது சிறந்தது.

Related News

Latest News