Tuesday, February 17, 2026

மழையின் போது ஏசியை பயன்படுத்துவது நல்லதா?

மழைக்காலத்தில், குறிப்பாக பலத்த மழை மற்றும் புயல் நேரங்களில், வீட்டில் ஏசியை பயன்படுத்துவது குறித்து நிபுணர்கள் சில முக்கியமான எச்சரிக்கைகளை வழங்குகின்றனர்.

பலத்த மழை மற்றும் புயலின் போது ஏசி பயன்படுத்துவது சில அபாயங்களை ஏற்படுத்தும். அதிகமான மின்சார தடைகள், வோல்டேஜ் ஏற்ற இறக்கங்கள், இடி மற்றும் மின்னல் தாக்கம் போன்றவை ஏசி மற்றும் பிற மின்சார உபகரணங்களை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது.

மழைக்காலத்தில் காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். இதை அகற்ற ஏசி அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். இதனால் மின்சார செலவு அதிகரிக்கும்.

சரியான வடிகால் அமைப்பு இல்லாமல் அவுட்டோர் யூனிட் நிறுவப்பட்டால், தண்ணீர் தேங்கி, வயரிங் சிஸ்டம் பாதிக்கப்படும். கூடுதலாக, புயல் காலத்தில் கல், மண் போன்றவை யூனிட்டுக்குள் புகுந்து அடைப்பை ஏற்படுத்தும்.

மழை மற்றும் புயல் காலங்களில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, ஏசியை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

Related News

Latest News