Monday, June 23, 2025

இஸ்ரேலுக்கு விழுந்த அடி! சாமர்த்தியமாக பாய்ந்த ‘மரண’ ஏவுகணை ‘Kheibar Shekan’ !

ஜூன் 22 ஆம் தேதி பென் குரியன் விமான நிலையம், இஸ்ரேலின் முக்கிய இராணுவ கட்டளை மையங்கள், மற்றும் பாதுகாப்பு இடங்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டன. இந்த தாக்குதலை செய்தது, வேறு யாரும் அல்ல – ஈரான் தான்!

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, IRGC, ஒரு அதிநவீன ஏவுகணையை இந்த தாக்குதலில் பயன்படுத்தியது. அதின் பெயர் – கெய்பர் ஷேகான் (Kheibar Shekan)! அரபில் இதன் அர்த்தம்? “கைபரை உடைத்தவர்!”

இதுவே 7ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் கைபரில் யூதர்களுடன் நடத்திய போரை நினைவுபடுத்தும் ஒரு வரலாற்று குறிப்பு. இப்போது அந்த பெயரே, இஸ்ரேலுக்கு எதிரான பலவீன நிலைக்கு ஒரு புது அடையாளமா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. கெய்பர் ஷேகான் என்பது கோர்ராம்ஷஹர் ஏவுகணை குடும்பத்தின் நான்காம் தலைமுறை. இதன் தாக்குதல்தூரம் – 1,450 கி.மீ!

முழுமையாக திட எரிபொருளில் இயங்குவதால், மிகவேகமாக ஏவலாம். இது சுமந்து செல்லும் வெடிகுண்டு மட்டும் 1,500 கிலோகிராம் எடை!இதன் நீளம் – மொத்தம் நான்கு மீட்டர்.

வளிமண்டலத்திற்கு வெளியே இது மணிக்கு 19,500 கி.மீ வேகத்தில் பாயும்; வளிமண்டலத்தில் அது 9,800 கிமீ வேகத்துடன் செல்கிறது. அதுமட்டுமல்ல, இது செயற்கைக்கோள் வழிசெலுத்தலுடன் கூடிய ஒரு மறுநுழைவு வாகனம் (MaRV) கொண்டுள்ளது – அதாவது இலக்கை அடைய இதன் திசை ஜிக்ஜாக் ஆக மாறும். எதிரி கண்காணிக்க முடியாது! மரண ஆதி நிச்சயம்….

சமீபத்தில் IRGC ஒரு முக்கிய கூற்று வெளியிட்டது: “இந்த நடவடிக்கையில் இன்னும் அனைத்து ஆயுதங்களும் பயன்படுத்தப்படவில்லை.” அதாவது? இன்னும் அதிநவீன ஏவுகணைகள் கையெழுத்தாக காத்திருக்கின்றன என்பது தான் சத்தமில்லாத எச்சரிக்கை!

கெய்பர் ஷேகான் தொடரின் ஆரம்பம் 2017ல் கோர்ராம்ஷஹர்-1 மூலம் தொடங்கியது. பின்னர் 2019ல் -2, 2023ல் -4 வெளியானது. ஆனால் கோர்ராம்ஷஹர்-3 பற்றி ஈரான் பெருமூச்சு விட்டாலும் – ரகசிய மேம்பாடுகள் உள்ளதாக இராணுவம் தெரிவிக்கிறது.

இப்போது கேள்வி – இது ஒரு தற்காலிக பதிலா? அல்லது ஒரு பெரிய போர் தொடக்கமா? என்பது தான்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news