போதைப்பொருள் ஒழிப்பு தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. போதைப்பொருள் பயன்பாடு குடும்பத்தையும் சமூகத்தையும் பாதித்து, உடல் மற்றும் மனநலத்துக்கு தீங்கு விளைவிப்பதோடு, குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கும் வழிவகுக்கிறது.
மக்கள் மற்றும் அரசு ஒருங்கிணைந்து, போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பது போதைப்பொருள் ஒழிப்பு தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
கடந்த சில ஆண்டுகளில் இந்திய முழுவதும் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. கோடிக்கணக்கான மதிப்பிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்
போதை பொருள் பயன்படுத்துவதால் மூளை செயல்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டு, நினைவாற்றல் குறைவு, மன அழுத்தம், கவலை போன்ற மனநல பிரச்சனைகள் ஏற்படும்.
போதைப்பொருள் அடிமை காரணமாக குடும்ப உறவுகள், வேலை மற்றும் கல்வி பாதிக்கப்படுகின்றன. மனநோய்கள் அதிகரித்து, சிலர் தற்கொலை முயற்சிகள் செய்யும் அபாயமும் உள்ளது.