இந்திய ராணுவத்தைப் பொருளிலும், பலத்திலும் ஒரு புதிய படிநிலைக்கு அழைத்து செல்லும் முக்கியமான நடவடிக்கையை அரசு தொடங்கியிருக்கிறது. ‘மிஷன் 13’ என்ற திட்டத்தின் கீழ், இந்தியா ரூ.1982 கோடி மதிப்பிலான ஆயுதங்களை அவசரமாகக் கொள்முதல் செய்யும் முடிவை எடுத்துள்ளது. Drones (ட்ரோன்கள்), Radars (ரேடார்கள்), Missiles (ஏவுகணைகள்) என பலவகையான நவீன உபகரணங்கள் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இராணுவத்தில் சேர்க்கப்பட இருக்கின்றன.
சமீபத்தில் ஆபரேஷன் சிந்து சுதர்சன் போன்ற வெற்றிகரமான நடவடிக்கைகள் மூலம் உலகத்திற்கு தனது ராணுவ வலிமையை இந்தியா நிரூபித்த நிலையில், இப்போது அதன் சக்தியை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்த புதிய ஆயுதங்கள் பெரும் பங்கு வகிக்கப்போகின்றன. பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கவும், பாதுகாப்பு பணிகளில் விரைந்து செயல்படவும், இந்த முயற்சியை மிக அவசியமானதாக அரசாங்கம் கருதுகிறது.
இந்த அவசர கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ், மொத்தம் 13 புதிய ஒப்பந்தங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்திய ராணுவம் 13 புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்களை செய்து முடித்துள்ளது. இதில், நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க பல புதிய உத்தியோகபூர்வ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் சேர்க்கப்படுகின்றன.
ட்ரோன்களை கண்டறிந்து அதை எதிர்க்கும் கருவிகள்,
தாழ்ந்த உயரத்தில் வேலை செய்யும் லைட் ரேடார் கருவிகள்,
அருகிலுள்ள விமானங்கள் மற்றும் ட்ரோன்களை எதிர்க்கும் குறுகிய தூர பாதுகாப்பு அமைப்புகள் போன்றவை இதில் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகின்றன.
மேலும், ராணுவத்துக்காக கீழ்காணும் புதிய தொழில்நுட்பங்கள் வாங்கப்படுகின்றன:
தானாக இயங்கும் விமானங்கள் (ட்ரோன்கள்),
சுற்றித் திரிந்து தாக்கும் வெடிமருந்துகள்,
VTOL எனப்படும் செங்குத்தாக புறப்பட்டு தரையிறங்கும் ட்ரோன்கள் ஆகியவைகள் லிஸ்ட்-இல் இருக்கின்றது.
முக்க்கியமாக இதற்கேற்ப, ராணுவ வீரர்களின் பாதுகாப்புக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது:
குண்டுகளை தடுக்கக்கூடிய ஜாக்கெட்டுகள்,
பாலிஸ்டிக் ஹெல்மெட்டுகள்,
பெரிய மற்றும் நடுத்தர அளவிலான விரைவில் தாக்குதல் நடத்தும் வாகனங்கள் ,
இரவில் தெளிவாக இலக்குகளை காணும் துப்பாக்கிகள் போன்றவைகளும் வாங்க அரசு தயாராக இருக்கின்றது.
இந்த “மிஷன் 13” திட்டம் இந்தியாவின் பாதுகாப்பு வரலாற்றில் முக்கியமான கட்டமாக இருக்கும் என கூறப்படுகிறது.