Friday, June 13, 2025

இந்தியாவின் பயங்கர போர் விமானம்! சோதனையிலே மிரண்டு நிற்கும் உலக நாடுகள் !

இந்திய விமானப்படையும், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பும் இணைந்து உருவாக்கியுள்ள புதிய தலைமுறை ஏவுகணை “காண்டீவா” விரைவில் வானில் சோதனை செய்யப்பட உள்ளது.


அஸ்ட்ரா MK-1 மற்றும் MK-2 ரகங்களுக்குப் பிறகு உருவாக்கப்படும் இந்த MK-3 வகை ஏவுகணை, திட எரிபொருள் ராம்ஜெட் எனும் ரகசிய சக்தி இயந்திரம் கொண்டு இயக்கப்படுகிறது.

இதன் மூலம் காண்டீவா, வானில் இருந்து அதிகபட்சமாக 340 கி.மீ. மற்றும் குறைந்தபட்சமாக 190 கி.மீ. தூரம் வரை இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் திறன் பெற்றது. இந்த ஏவுகணையின் வேகம் மணிக்கு 5,370 கி.மீ., அதாவது ஒலி வேகத்தைவிட மிக அதிகம்!

இது எந்தவித ராக்கெட் எஞ்சின் உந்துதலுமின்றி, வான் ஆக்ஸிஜனை நேரடியாகப் பயன்படுத்தி இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், எடை குறைவாகவும், செயல்திறன் அதிகமாகவும் உள்ளது.

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காண்டீவா, எதிரி விமானங்கள், ஆயுத ட்ரோன்கள், வான்வெளி எச்சரிக்கை அமைப்புகள், குண்டுவீசும் விமானங்கள் போன்றவற்றை இலக்காகக் கொண்டு, சுழலும் முறையிலும், திடீரென திசை மாற்றும் வண்ணமும் தாக்கும் திறன் கொண்டது.

இதில் உள்ள த்ராட்டில் கட்டுப்பாடு காரணமாக, நடுவழியில் வேகத்தையும், உந்துதலையும் மாற்றிக் கொள்ள முடிகிறது.

2024 ஆம் ஆண்டு டிசம்பரில், ஒடிஸாவில் நடந்த தரை சோதனையில் காண்டீவா வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இப்போது, இந்த ஏவுகணையை எஸ்யு-30 எம்.கே.ஐ., தேஜாஸ், மிக்-29, ரஃபேல் போன்ற இந்தியப் போர் விமானங்களில் ஒருங்கிணைத்து, வானில் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

10 கி.மீ உயரத்திலிருந்தும், கீழுமாகவும் திடீரென திரும்பி இலக்கை தாக்கும் திறனும், 20 டிகிரி கோணத்தில் “குட்டிக்கரணம்” போட்டு தாக்கும் திறனும், காண்டீவாவை ஒரு அதிநவீன ஏவுகணையாக மாற்றுகிறது.

இந்தியாவின் பாதுகாப்பு வலிமையை உலகளவில் நிரூபிக்க, காண்டீவா ஒரு புதிய கட்டத்தை தொடக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news