Monday, August 18, 2025
HTML tutorial

போருக்கு தாயரான இந்தியா-பாகிஸ்தான் ! நடுவே வந்து அமெரிக்கா சொன்ன அந்த விஷயம்…?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவுகின்ற பதற்ற நிலைமை நாளுக்குநாள் தீவிரமாகி வருகிறது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலடி அளிக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆயுதப்படைகளுக்கு “முழு செயல்பாட்டு சுதந்திரம்” வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில்  நடைபெற்ற ஒரு உயர்மட்டக் கூட்டத்தில், இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மூன்று படைகளின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். “தீவிரவாதத்திற்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் இது,” என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். ராணுவம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கலாம் என நேரடியாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாகிஸ்தான் தரப்பிலும் பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருக்கிறார்கள். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறியதுபோல், இந்திய தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளதால், அவர்களது ராணுவத்தை முழு தயாரிப்புடன் வைத்திருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா தாக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன என்பதாலேயே பாகிஸ்தான் சில ரகசிய முடிவுகளை எடுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில், உலக நாடுகள் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளன. அமெரிக்கா, இரு நாடுகளும் அமைதியாக பேச்சுவார்த்தை வழியில் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. “நல்லது, மோசம் என்று பகிராதீர்கள். அணு ஆயுதங்கள் உள்ள நாடுகள், கட்டுப்பாட்டோடும் பொறுப்போடும் செயல்பட வேண்டும்,” என்பதே அமெரிக்காவின் முக்கிய மெசேஜ்.

இப்போது நிலைமை மிகவும் நுணுக்கமான கட்டத்தில் உள்ளது. இந்தப் பிரச்சனை மேலும் தீவிரமாகாமல் இருக்க இரு நாடுகளும் அமைதியான, சிந்தித்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News