Monday, June 30, 2025

இந்தியா – அமெரிக்கா போட்ட புதிய கூட்டணி! இன்னும் 8 நாள் தான்!பதறும் பாகிஸ்தான்!

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான தற்காலிக வர்த்தக ஒப்பந்தம் மிக விரைவில், ஜூலை 8-ம் தேதிக்குள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இரு நாடுகளும் ஒப்பந்தத்தின் அனைத்து விதிமுறைகளுக்கும் உடன்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா சார்பாக வர்த்தகத் துறையின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழு தற்போது வாஷிங்டனில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.

இதுவரை அமெரிக்கா இந்தியா மீது 26 சதவீத வரி விதித்து வந்தது. கடந்த காலங்களில் இந்த வரி ஜூலை 9-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு மேலாக 10 சதவீத அடிப்படை வரி இன்னும் உள்ளது. இந்தியா, இந்த கூடுதல் 26 சதவீத வரியில் இருந்து முழு விலக்கை பெற வேண்டும் என்று தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகம் அனைத்து வர்த்தக தடைகளையும் நீக்க விரும்புவதாகவும், இந்தியாவுடன் பெரிய வர்த்தக ஒப்பந்தம் உருவாகி வருவதாகவும் சமீபத்தில் கூறியுள்ளார்.

இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் முக்கியமாக விவசாயம், வாகனங்கள், தொழில்துறை பொருட்கள் மற்றும் அதிக தொழிலாளர்களை ஈடுபடுத்தும் உற்பத்திப் பொருட்கள் போன்ற துறைகளுக்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, இந்தியாவிலிருந்து வாங்கும் மின்சார வாகனங்கள், ஒயின், பெட்ரோ கெமிக்கல் பொருட்கள், பால், ஆப்பிள்கள், மரப்பொருட்கள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் போன்ற விவசாயப் பொருட்களுக்கு வரிச் சலுகைகளை எதிர்பார்க்கிறது. அதே நேரத்தில், இந்தியா ஜவுளி, ரத்தினம், நகைகள், தோல் பொருட்கள், ஆடைகள், பிளாஸ்டிக், ரசாயனங்கள், இறால், எண்ணெய் விதைகள், திராட்சை மற்றும் வாழைப்பழங்கள் போன்ற தொழிலாளர்கள் அதிகமாக ஈடுபடும் துறைகளுக்கு அமெரிக்கா விரிவான சலுகைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியுள்ளது.

இந்த ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான வர்த்தக வரி விதிப்புகளையும் வெளியுறவுக் கொள்கைகளையும் முடிவு செய்வதில் முக்கியப் பங்காற்ற உள்ளது. இரு நாடுகளின் வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளது என்று இந்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் நடைபெறும் பெரிய திட்டங்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் டெண்டர்கள் பெறும் வாய்ப்பு உருவாகும் எனவும், இதனால் அமெரிக்கா 500 பில்லியன் டாலர் வருமானம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே சமயத்தில், பாகிஸ்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்க விரைந்து வருகிறது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 29 சதவீத வரி விதித்து வருகிறது. இதனால் அமெரிக்கா 3 பில்லியன் டாலர் வர்த்தக இழப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் நோக்கில் பாகிஸ்தான் தலைவர்கள் அமெரிக்காவை சமாதானப்படுத்த விரைந்து வருகின்றனர். ஆனால் இந்தியா அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது என்பதால் பாகிஸ்தான் அவசரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியாவும் அமெரிக்காவும் இடையேயான இந்த வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பொருளாதார வளர்ச்சியில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய முயற்சியாக உள்ளது. வர்த்தக தடைகளை குறைத்தும், இரு தரப்புக்கும் அதிக வருமானம் மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news