Wednesday, September 10, 2025

துணை குடியரசு தலைவர் தேர்தலில் சி. பி. ராதாகிருஷ்ணன் வெற்றி

துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய துணை குடியரசு தலைவர் தேர்வு செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து பட்டியல் வெளியிட்டது.

இதில் பாஜக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவை சேர்ந்த சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார். இன்று காலை 10 மணி தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.

வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் மொத்தம் 770 வாக்குகள் பதிவானது.தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 452 வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை பெற்றார்.

இதன் மூலம் 152 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் அபார வெற்றிபெற்றார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News