Thursday, January 15, 2026

அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் ; தற்கொலைக்கு முன் தாய்க்கு குறுஞ்செய்தி அனுப்பிய கர்ப்பிணி பெண்

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாங்குளரில் 23 வயதான கர்ப்பிணிப் பெண் ஃபசீலா தனது கணவரின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜூலை 29 ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்ட அவர் குடும்பத்தின் புகாரின் பேரில், கணவர் நௌபால் மற்றும் மாமியார் ரம்லா கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர்.

தற்கொலை செய்வதற்கு முன் ஃபசீலா தனது தாயிடம் அனுப்பிய கடைசி செய்திகளில், “நான் இறக்கப் போகிறேன், இல்லையெனில் அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்” எனப் பதிவிட்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News