அகமதாபாத்தில் நடந்த Qualifier 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்று, தொடரை விட்டே வெளியேறியுள்ளது. உலகத்தின் தலைசிறந்த பவுலர் பும்ராவால் கூட, பஞ்சாப்பை அடக்க முடியவில்லை. இதையடுத்து IPL இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தநிலையில் மும்பை இந்தியன்ஸின் தோல்விக்கு, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் Mahela Jayawardeneவே முழுக்காரணமாகி இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவை சொந்தமாக முடிவெடுக்க விடாமல், Dug Outல் இருந்து தொடர்ச்சியாக அவருக்கு ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார்.
13வது ஓவரில் உயரமான பவுலர் Topleyஐ பந்துவீசுமாறு அவர் கொடுத்த ஆலோசனை, மொத்த ஆட்டத்தையும் மாற்றி விட்டது. ஏனெனில் அந்த ஓவரில் மட்டும் ஷ்ரேயாஸ் 3 சிக்ஸர்களை வெளுத்து விட்டார். அதற்குப்பின் மும்பையால் மீண்டும் Comeback கொடுக்க முடியவில்லை.
ஆட்டத்திற்கு நடுவே Jayawardene கொடுத்த ஆலோசனைகளை, ஒருகட்டத்தில் கேப்டன் ஹர்திக் புறக்கணிக்க ஆரம்பித்து விட்டார். இதையடுத்து பவுண்டரி எல்லைக்கு அருகே Fielding செய்து கொண்டிருந்த பும்ராவிடம் Jayawardene பேச முயற்சித்தார்.
ஆனால் பும்ரா சட்டென அந்த இடத்தைவிட்டு, ரோஹித் சர்மா அருகில் சென்று அமர்ந்து விட்டார். என்றாலும் Jayawardene அவரை விடவில்லை. ஒருகட்டத்தில் , ” எப்படி பந்துவீச வேண்டுமென்று எனக்குத் தெரியும். உங்கள் வேலையை பார்த்துக்கொண்டு செல்லுங்கள்” என்று பும்ரா கொந்தளித்து விட்டார்.
இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன. இந்தநிலையில் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், மும்பையின் பயிற்சியாளர் குழுவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர், ” ஒரு கோப்பை கூட வெல்லாத Jayawardene தொடர்ச்சியாக, ஆலோசனைகளை வழங்கிக் கொண்டே இருக்கிறார்.
ஹர்திக், பும்ரா, ரோஹித் மூவரும் உலகக்கோப்பை வென்றவர்கள். அவர்களுக்கு எப்படி விளையாட வேண்டுமென்று தெரியும். கேப்டனுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கக்கூடாது. அவர்களை தங்களின் இயல்பில் விளையாட அனுமதிக்க வேண்டும்,” என்று விட்டு விளாசி இருக்கிறார்.