Wednesday, January 7, 2026

போர்க்களத்தில் வீரருக்கு நண்பனாகிய குருவி

உலக மக்களை சிறிது நிம்மதியடைய செய்துள்ளது ரஷ்யா அறிவித்துள்ள தற்காலிக போர் நிறுத்தம்.பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய தாக்குதலுக்கு மத்தியில் பல உணர்ச்சிப்பூர்வமான தருணங்களை சந்தித்து உள்ளனர் உக்ரைன் மக்கள்.

மீண்டும் உக்ரைன் – ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் , மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான முகாம்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர் .

உக்ரைன் மக்கள் சமூக வளைத்ததில் தங்கள் தற்போதிய சூழலை உலகம் அறியச்செய்து வருகின்றனர். போர் களத்தில் நிகழ்ந்த சில ஸ்வாரசியாமான நிகழ்வுகளும் இணையத்தில் உலா வருகின்றன. அதுபோன்ற ஓர் வீடியோவில் ,

உக்ரைன் வீரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுஉள்ளார். அவருடன் ஒரு குருவி விளையாடிக்கொண்டு உள்ளது. அந்த வீரரின் தோல் பகுதியில் நீண்டபடி அவரின் காது ,கன்னங்களில் முத்தமிடுவதுபோல செய்யும் அந்த குருவி ..ஏதோ சிறுவயது நண்பன் போல …துளி அச்சமின்றி அந்த வீரர் உடன் பழகி வருகிறது.

எங்கே பிறந்தாலும் ,எப்படியோ இருந்தாலும் உணர்வை உணர்வுக்கு ஒன்று சேர தருவது தான் நட்பு என்பதை உணர்த்தும் விதம் உள்ளது இவர்களின் நட்பு.

Related News

Latest News