Tuesday, July 1, 2025

ராணிப்பேட்டையில் கடும் பனிப்பொழிவு – வாகன ஒட்டிகள் அவதி

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளான வாலாஜாபேட்டை, சோளிங்கர், நெமிலி, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. பனிப்பொழிவுடன் குளிர்ந்த காற்று விசியதால், பொதுமக்கள் வெளியே வராமல் வீடுகளில் முடங்கினர்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்ற வாகனங்கள் தெரியாததால் வாகன ஒட்டிகள் அவதியடைந்தனர். முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு வாகனங்களை இயக்கினர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news