டிட்வா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 400 கன அடியில் இருந்து 1,444 கன அடியாக அதிகரித்துள்ளது.
புழல் ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 2200 கன அடியில் இருந்து 4167 கன அடியாக அதிகரித்துள்ளது.
சோழவரம் ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 289 கன அடியில் இருந்து 1605 கன அடியாக அதிகரித்துள்ளது.
பூண்டி ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 2100 கன அடியில் இருந்து 2500 கன அடியாக அதிகரித்துள்ளது.
