வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் ஒரு சில மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.12-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.