தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இன்று முதல் வரும் 12ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
அதாவது, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, கரூர், திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
நாளை அதாவது அக்டோபர் 09-ம் தேதி, 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதாவது கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும்,நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 10-ம் தேதி 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், வரும் 11-ந்தேதி 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
வரும் 12-ந்தேதி 18 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது. அதன்படி, கோவை, நீலகிரி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.