Thursday, August 7, 2025
HTML tutorial

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் : இளைஞருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

கடந்த 2022ம் ஆண்டு சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில்(35) என்பவர், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக அம்பத்தூர் மகளிர் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் செந்திலை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, தற்போது திருவள்ளூர் மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் செந்திலுக்கு, சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்துக்காக 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News