Sunday, June 1, 2025

இலங்கையில் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு : இருவர் பலி

இலங்கையில் மன்னார் நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வழக்கு தெடர்பாக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்கள் மீது குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டின் போது 4 பேர் படுகாயமடைந்தனர். அதில் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் தப்பி சென்ற நிலையில் மன்னார் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news