குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அகமதாபாத்தில் இருந்து லண்டன் கிளம்பிய விமானம் சில நிமிடங்களில் கீழே விழுந்து தீ பற்றியது. விமானத்தில் பயணித்த 242 பயணிகளின் நிலைமை குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தில் பயணிகள் பலர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.