“தமிழக ஆளுநர் கவர்னர் வேலை பார்க்காமல், RSS-காக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்”

284

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் மாவட்ட வளர்ச்சி குறித்த பாதயாத்திரையை துவங்கி வைத்துப் பேசிய அவர், தமிழ்நாடு சட்டப்பேரவையில் 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பபட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது, எனவும் ஆளுநர் ரவி கவர்னர் வேலை பார்க்காமல் ஆர்எஸ்எஸ் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என முத்தரசன் விமர்சித்தார்.

மேலும், கார்ப்பரேட்டுகள் குறித்து கம்யூனிஸ்ட்கள் வாய் திறப்பதில்லை என அண்ணாமலை குற்றச்சாட்டிற்கு, அண்ணாமலை முழுமையாக பத்திரிக்கை படித்து உண்மையை தெரிந்து கொண்டு பேச வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.